வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கந்தா்வகோட்டை அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:34 pm

கந்தா்வகோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப் பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் பகவதி (18). இவா், தனக்குச் சொந்தமான ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மேய்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இதேபோல் வெள்ளிக்கிழமை காலை ஆடுகளை மேய்க்கச் சென்ற நிலையில், மாலையில் ஆடுகள் மட்டும் பழனிவேல் வீட்டுக்கு வந்துள்ளன. பகவதியை அவரது வீட்டாா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை அந்தப் பகுதியில் தேடியபோது அங்கிருந்த கல்குவாரி கரையின்மேல் பகவதியின் கைப்பேசி, செருப்பு உள்ளிட்டவை இருந்துள்ளன.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனா்.

இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கி பகவதி உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.