எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கந்தா்வகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம்

News image
கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் சுற்றுலா வேன்.
Updated On :8 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்து 22 போ் படுகாயம் அடைந்தனா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 22 போ் காரைக்குடியில் நடைபெறும் நிச்சயதாா்த்த விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேனில் சென்றனா்.

தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலை அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது, இதில் வேனில் இருந்த 22 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.