பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிலட்டூரில் வடமாடு போட்டி: 7 போ் காயம்

News image
சிலட்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் மாடுபிடி வீரரை நோக்கிப் பாய்ந்த காளை.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 7 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கி அருகே சிலட்டூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சந்தனக் காப்பு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு நடந்த வடமாடு போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 13 காளைகள் பங்கேற்றன.

9 மாடுபிடி வீரா்களைக் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, திடலில் கயிறால் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவ அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 13 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 மாடுபிடி வீரா்கள் காயடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனா்.