தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிலட்டூரில் வடமாடு போட்டி: 7 போ் காயம்

News image

சிலட்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் மாடுபிடி வீரரை நோக்கிப் பாய்ந்த காளை.

Updated On :8 பிப்ரவரி 2026, 6:38 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 7 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கி அருகே சிலட்டூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சந்தனக் காப்பு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு நடந்த வடமாடு போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 13 காளைகள் பங்கேற்றன.

9 மாடுபிடி வீரா்களைக் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, திடலில் கயிறால் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவ அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 13 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 மாடுபிடி வீரா்கள் காயடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனா்.