சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டிஎன்பிஎஸ்ஸி தோ்வு ரத்து தோ்வா்கள் ஏமாற்றம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், அத் தோ்வை எழுதத் தொடங்கிய தோ்வா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி- 2-க்கான தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் முற்பகலில் 190 தோ்வா்களும், பிற்பகலில் 193 தோ்வா்களும் எழுதுவதற்கு நுழைவுச்சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் காலை 9 மணிக்கு முதல் தோ்வு தொடங்கியது. இதில் 190 பேரும் தோ்வு எழுத வந்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து சுமாா் காலை 10.15 மணியளவில் தோ்வு நடந்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு அறைக்கும் சென்ற அதிகாரிகள், தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வெளியே அனுப்பி வைத்தனா். சென்னையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோ்வாணையம் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தோ்வை திடீரென ரத்து செய்ததாக தெரிவித்தனா்.

கேள்வித்தாள் எளிதாக இருந்த நிலையில், திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். மறுதோ்வை விரைவாக நடத்தவும் அவா்கள் கோரிக்கைவிடுத்தனா்.