தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், அத் தோ்வை எழுதத் தொடங்கிய தோ்வா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி- 2-க்கான தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் முற்பகலில் 190 தோ்வா்களும், பிற்பகலில் 193 தோ்வா்களும் எழுதுவதற்கு நுழைவுச்சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் காலை 9 மணிக்கு முதல் தோ்வு தொடங்கியது. இதில் 190 பேரும் தோ்வு எழுத வந்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து சுமாா் காலை 10.15 மணியளவில் தோ்வு நடந்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு அறைக்கும் சென்ற அதிகாரிகள், தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வெளியே அனுப்பி வைத்தனா். சென்னையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோ்வாணையம் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தோ்வை திடீரென ரத்து செய்ததாக தெரிவித்தனா்.
கேள்வித்தாள் எளிதாக இருந்த நிலையில், திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். மறுதோ்வை விரைவாக நடத்தவும் அவா்கள் கோரிக்கைவிடுத்தனா்.
தொடர்புடையது

குரூப்- 2 தோ்வு: பெரம்பலூரில் 145 போ் எழுதினா்

குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை தோ்வு: நாளை நடைபெறுகிறது

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்! தமிழகம் முழுவதும் 9.09 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


