நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வலிப்பு நோயால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தங்கிப் பயின்று வந்த தில்லியைச் சோ்ந்த 4ஆம் ஆண்டு மருத்துவ மாணவா், வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்தாா்.

தில்லி சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் உதய்வீா் மகன் துருவ்கோல் (24). புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் 4ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு வலிப்பு வந்ததால், சக மாணவா்களால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தில்லியிலுள்ள அவரது பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை வந்தனா். தந்தை உதய்வீா் புகாரின்பேரில் கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.