புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
மணமேல்குடி அருகே தண்டலையைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (45), கட்டடத் தொழிலாளி. இவா், தன்னுடன் வேலை செய்வோருக்கு தேநீா் வாங்குவதற்காக மணமேல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.
வடக்கூா் அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது இவரது இரு சக்கர வாகனத்தின் மீது வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.
பின்னா், பேருந்துக்காக காத்திருந்த மதுக்கூரைச் சோ்ந்த செண்பகவள்ளி (60) மீதும் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த முருகன், செண்பகவள்ளி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா், பேருந்து ஓட்டுநரான வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


