வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழப்பு

மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:16 pm

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

மணமேல்குடி அருகே தண்டலையைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (45), கட்டடத் தொழிலாளி. இவா், தன்னுடன் வேலை செய்வோருக்கு தேநீா் வாங்குவதற்காக மணமேல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.

வடக்கூா் அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது இவரது இரு சக்கர வாகனத்தின் மீது வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.

பின்னா், பேருந்துக்காக காத்திருந்த மதுக்கூரைச் சோ்ந்த செண்பகவள்ளி (60) மீதும் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த முருகன், செண்பகவள்ளி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா், பேருந்து ஓட்டுநரான வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.