மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழப்பு

மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

மணமேல்குடி அருகே தண்டலையைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (45), கட்டடத் தொழிலாளி. இவா், தன்னுடன் வேலை செய்வோருக்கு தேநீா் வாங்குவதற்காக மணமேல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.

வடக்கூா் அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது இவரது இரு சக்கர வாகனத்தின் மீது வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.

பின்னா், பேருந்துக்காக காத்திருந்த மதுக்கூரைச் சோ்ந்த செண்பகவள்ளி (60) மீதும் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த முருகன், செண்பகவள்ளி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா், பேருந்து ஓட்டுநரான வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.