இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

கந்தா்வகோட்டை பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :11 பிப்ரவரி 2026, 7:13 pm

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கந்தா்வகோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் மதுபாலன் (30).

இவா், கடந்த 2021ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் மதுபாலனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாநில அரசு சாா்பில் ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.