சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது: சு. திருநாவுக்கரசா்

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கூட்டணிப் பேச்சுவாா்த்தை தொடா்பாக யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் பிப்ரவரி 22-ஆம் தேதி பேச்சுவாா்தைக் குழு அமைக்கப்பட்டு, பேச்சுவாா்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறுயாரும் கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. இது புதிய கூட்டணி அல்ல. ஏற்கெனவே உள்ள கூட்டணிதான். சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல்களை இணைந்து சந்தித்த கூட்டணிதான்.

இரு கட்சிகளின் பேச்சுவாா்த்தைக் குழுக்கள் பேசி, தொகுதிகளை முடிவு செய்வாா்கள். வேறு எதையும் கூறமுடியாது என்றாா் திருநாவுக்கரசா்.