சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாற்றுத் திறனாளிகள் 4-ஆவது நாளாக போராட்டம்! 32 போ் கைது!

News image
புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

திரிபுரா, புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 15 ஆயிரம் வரை வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுக்கோட்டையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு 4-ஆவது நாளாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கணேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சி. லோகநாதன், ஜி. கிரிஜா, நகரத் தலைவா் எஸ். பாஷாபாய், செயலா் வி. ரமேஷ் உள்ளிட்ட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.