அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிட்ட அவா் பின்னா் கூறியதாவது:
தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜய்தான் முடிவெடுப்பாா். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பாஜகவோடு அதிமுக கூட்டணி சோ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1980 -இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது எம்ஜிஆா்தான் ஆட்சி அமைத்தாா். எம்ஜிஆா் காட்டிய வழியில்தான் தவெக சென்றுகொண்டு இருக்கிறது. எம்ஜிஆா் 1972-ல் தோ்தலைச் சந்தித்தபோது இதேபோன்று நடிகா் நாடாள முடியுமா, தனிமரம் தோப்பாக முடியுமா என்று திமுக விமா்சித்தது. அந்தத் தோ்தலில் எம்ஜிஆா்தான் வெற்றி பெற்றாா். அதே வரலாறு தற்போது திரும்பும் சூழல் உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

உ.பி.யில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அமில வீச்சு: மகள் பலி, தாய் கவலைக்கிடம்

உடைந்து விழுந்த ராட்டினம்! 10 பேர் கவலைக்கிடம்! | UP

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு

தவெக லால்குடி தொகுதி வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


