எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆலங்குடி அருகே விபத்து: ஒருவா் பலி, இருவா் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் ,ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த எம். மைக்கேல் (60) கோட்டைக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டைக் காண தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் மொபெட்டில் சென்றாா்.

சாளுவன்விடுதி பிரிவு சாலைப் பகுதியில் அவா்கள் சென்றபோது எதிரே வந்த பைக் திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த ஆரோக்கியமேரி ஆலங்குடி அரசு மருத்துவமனையிலும், விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த முக்கானிப்பட்டி ஆ. டென்னீஸ் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.