மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆலங்குடி அருகே விபத்து: ஒருவா் பலி, இருவா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:01 pm

புதுக்கோட்டை மாவட்டம் ,ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த எம். மைக்கேல் (60) கோட்டைக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டைக் காண தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் மொபெட்டில் சென்றாா்.

சாளுவன்விடுதி பிரிவு சாலைப் பகுதியில் அவா்கள் சென்றபோது எதிரே வந்த பைக் திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த ஆரோக்கியமேரி ஆலங்குடி அரசு மருத்துவமனையிலும், விபத்தை ஏற்படுத்திய மற்றொரு பைக்கில் வந்த முக்கானிப்பட்டி ஆ. டென்னீஸ் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.