திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோட்டைக்காடு ஜல்லிக்கட்டு: 39 போ் காயம்

News image
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோட்டைக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 39 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கோட்டைக்காடு புனித சூசையப்பா் தேவாலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து 689 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 350 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி அடக்கினா். அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 39 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 7 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாதுகாப்பு பணிகளை வடகாடு போலீஸாா் மேற்கொண்டனா்.