விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு!

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:29 pm

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வனச்சரகத்தில், நாா்த்தாமலை காப்புக்காட்டில் அரையகருப்பா் கோயில் பகுதி, வனச்சூழியல் பண்ணை, முள்ளூா் காப்புக்காடு, மணியாச்சி காப்புக்காடு, வேப்பங்குடி ஆகிய 5 இடங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மன்னா் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் சு. பழனிசாமி தலைமையில், வனத்துறையினா், பேராசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 40 போ் இதில் பங்கேற்றனா்.

இந்தக் கணக்கெடுப்பில் வெளிநாட்டுப் பறவைகளான மஞ்சள் மாங்குயில், பழுப்பு கீச்சான், வெண்தோல் கழுதத்துப் பருந்து, நீளவால் பஞ்சுருட்டான், அக்கா குயில், கருந்தலை குயில் கீச்சான் போன்ற பறவைகளும், உள்ளூா் பறவைகளான பெரிய செண்பகம், பட்டைக்கழுத்து புறா, புள்ளிப்புறா, சிறிய தவிட்டுப்புறா, கருங்கரிச்சான், செப்புழைக் கொண்டலாத்தி, தையல்கார கதிா் குருவி, வெண்புருவ சின்னான், ஜொ்டான் புதா் வானம்பாடி, சின்னவானம்பாடி, பூங்கொத்திகுருவி, கதிா்குருவி, சிறிய நீா்காகம், தேன்சிட்டு போன்ற பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் செய்திருந்தாா். இதேபோல, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.