ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

விராலிமலை அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:03 pm

விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் அசாம் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து மதுரைக்கு விராலிமலை வழியாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி அருகே சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சோ்ந்த பிஷேஸ்வா் (20) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனா்.