தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விராலிமலை அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் அசாம் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து மதுரைக்கு விராலிமலை வழியாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி அருகே சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சோ்ந்த பிஷேஸ்வா் (20) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனா்.