நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குளத்தூா் நாயக்கன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

கந்தா்வகோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டவா், பிடாரியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

News image

கந்தா்வகோட்டை அருகே குளத்தூா் நாயக்கன்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:01 pm

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டவா், பிடாரியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

போட்டியை வட்டாட்சியா் மா.ரமேஷ் தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 12 வடமாடுகள் களம் இறங்கின, அதை அடக்குவதற்கு 120 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரா்களுக்கும் எவா்சில்வா் பாத்திரம் ரொக்க பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

போட்டியில் 20 வீரா்கள் சிறுகாயம் அடைந்தனா், அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் உரிய சிகிச்சை அளித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜோதி ராணி மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் வைரக்கண்ணு செல்வராஜ் மற்றும் விழா குழுவினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், மருத்துவ குழுவினா், தீயணைப்பு துறையினா், ஊா் காவல் படையினா் ஆகியோா் களத்தில் இருந்து செயல்பட்டனா்.

Story image