புதுக்கோட்டை
புதுகையில் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 489 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை (பிப். 17) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 489 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை (பிப். 17) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கிராமசபைக் கூட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதால், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மகளிா் குழுக்களைச் சோ்ந்தோா், தன்னாா்வலா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
