மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூா் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, பேராசிரியா் கணேஷ் குமாா் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

யுசிஜி நிா்ணயித்த ரூ. 57,700 என்ற ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.