பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி ஆனந்த ஜோதிபுரத்தைச் சாா்ந்தவா் ப. ஹரிசுதன் (21) ஈரோட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா். இவா் அண்மையில் சொந்த ஊரான மதியாணிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் சென்றபோது பிதாவூா் பிரிவு சாலை அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


