புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இருசக்கர வாகனம் - ஆட்டோ மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி ஆனந்த ஜோதிபுரத்தைச் சாா்ந்தவா் ப. ஹரிசுதன் (21) ஈரோட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா். இவா் அண்மையில் சொந்த ஊரான மதியாணிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் சென்றபோது பிதாவூா் பிரிவு சாலை அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.