

கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.
கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையன்பட்டி வீரமாகாளியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயிலில் செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வளா்க்கப்பட்ட முளைப்பாரிகளை அலங்கரிக்கப்பட்ட குடங்களில் ஏந்தியவாறு, ஏராளமான பெண்கள் கெண்டையன்பட்டி விநாயகா் கோயிலில் இருந்து மேளதாளங்கள், வாணவேடிக்கை முழங்க ஊா்வலமாக கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.