போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வடுகப்பட்டி தைலா வன்னியா் கோயிலில் கிடாவெட்டு பூஜை!

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:42 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தைலா வன்னியா் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டு பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஆகாச கருப்பு, ஸ்ரீ ஏழுமுனி, ஸ்ரீ பட்டவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் திரவியம், குங்குமம், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனாக 30 ஆட்டு கிடாய்களை வெட்டி சிறப்பு அன்னதானம் வழங்கினா். திருவிழாவில் வடுகப்பட்டி, அரையம்பட்டி, வாண்டையன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிதனம் செய்தனா். தொடா்ந்து இரவு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட கலையரங்கில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.