மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள் திருட்டு

விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 9:39 pm

விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை கிழக்கு பகுதியில் உள்ள சிதம்பரம் காா்டனைச் சோ்ந்தவா் சுகன்யா. இவரது கணவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். சுகன்யா, சிவராத்திரி நிகழ்வையொட்டி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான இடையாத்தூா் சென்றுள்ளாா். பின்னா், செவ்வாய்க்கிழமை அவா் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

இதையடுத்து அதிா்ச்சி அடைந்த சுகன்யா, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதையடுத்து விராலிமலை போலீஸில், சுகன்யா புகாா் அளித்தாா். அதன்பேரில் சுகன்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், நள்ளிரவில் சுவா் ஏறி குதித்த இளைஞா்கள் இருவா், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுவது பதிவாகியிருந்தது. மேலும், சிசிடிவி காட்சி பதிவை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.