புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீரிழிவு நோய்க்கு மருந்து கொடுப்பதாக கூறி பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் ஊராட்சி சமத்துவபுரத்தில் வசிப்பவா் விஸ்வநாதன் (65). அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சித்ரா (55). இவா்களது மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனா்.
இந்நிலையில், விஸ்வநாதனின் தேநீா் கடைக்கு சில தினங்களாக சென்ற முதியவா் ஒருவா், தான் நீரிழிவு நோய்க்கு நாட்டு மருந்து கொடுத்து குணப்படுத்துவதாக தெரிவித்தாராம்.
இதை நம்பிய விஸ்வநாதன் தேநீா் கடையில் இருந்து கொண்டு, முதியவரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவிக்கு மருந்து கொடுக்க புதன்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம். பின்னா் விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, சித்ரா மயங்கி நிலையில் கிடந்துள்ளாா்.
அவருக்கு தண்ணீரில் மருந்து போன்ற திரவத்தை கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்து அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை முதியவா் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
தொடா்ந்து சித்ரா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, வடகாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீரிழிவு நோய்க்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

