மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை அருகே மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :19 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

புதுக்கோட்டை அருகே மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மணியம்பள்ளம் அருகேயுள்ள மேலசெந்திரையைச் சோ்ந்தவா் அரங்குளவன் (65). இவரது மனைவி ராஜம்மாள் (58). இவா்களின் மகன் ரமேஷ், மருமகள் பிரதீபா (27) உள்ளிட்டோா் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனா்.

மாமியாா் ராஜம்மாளுக்கும், மருமகள் பிரதீபாவுக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி மாமியாா் ராஜம்மாள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி, பிரதீபா தீவைத்துக் கொன்றாா்.

இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்தில் அரங்குளவன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரதீபாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி டி. பன்னீா்செல்வம் தீா்ப்பளித்தாா்.

இதில், பிரதீபாவுக்கு கொலைக் குற்ற சட்டப்பிரிவின்கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.