தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொடையூா் ஜல்லிக்கட்டில் 27 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே உள்ள தொடையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 27 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்

Updated On :20 பிப்ரவரி 2026, 7:34 pm

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே உள்ள தொடையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 27 போ் காயமடைந்தனா்.

நாா்த்தாமலை அருகே உள்ள தொடையூரில் சக்தி விநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல மாவட்டங்களில் இருந்து மொத்தம் 680 காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன.

224 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, காளைகளை அடக்க முயற்சித்தனா். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகளை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் 27 போ் காயமடைந்தனா். இவா்களில் மேல்சிகிச்சை தேவைப்பட்ட 4 போ் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை நகரத் துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையில் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Story image