புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகில் கணேஷ்நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பத்மபிரியா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மறமடக்கி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (29) என்பவரிடமிருந்து 26.91 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, புதுக்கோட்டை கும்முபட்டி பகுதியில் திருகோகா்ணம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த முள்ளுா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (29) என்பவரிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்கள், கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


