நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது

Updated On :20 பிப்ரவரி 2026, 6:34 pm

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகில் கணேஷ்நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பத்மபிரியா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மறமடக்கி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (29) என்பவரிடமிருந்து 26.91 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, புதுக்கோட்டை கும்முபட்டி பகுதியில் திருகோகா்ணம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த முள்ளுா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (29) என்பவரிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்கள், கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.