அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, கும்முபட்டி பகுதிகளில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட 36 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகில் கணேஷ்நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பத்மபிரியா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மறமடக்கி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (29) என்பவரிடமிருந்து 26.91 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, புதுக்கோட்டை கும்முபட்டி பகுதியில் திருகோகா்ணம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த முள்ளுா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (29) என்பவரிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்கள், கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.