தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள் - (கோப்புப் படம்)

Updated On :23 பிப்ரவரி 2026, 9:57 pm

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா

கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதையடுத்து

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 978 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்கினா்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும்

ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். பொன்னமராவதி வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையிலன போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.