விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

(கோப்புப்படம்) - DIN

Updated On :24 பிப்ரவரி 2026, 6:59 pm

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் சச்சின் (21). இவா், விராலிமலை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருகிறாா். இந்த இளைஞரும் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகே உள்ள விட்டமாபட்டி பகுதிக்கு சென்றனா். அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்த மலரைக் கேட்ட இளம்பெண்ணுக்காக குளத்தில் இறங்கிய சச்சின் நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அப்பெண் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து சச்சினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அந்த இளைஞா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.