6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
(கோப்புப்படம்)- DIN
Updated On :24 பிப்ரவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் சச்சின் (21). இவா், விராலிமலை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருகிறாா். இந்த இளைஞரும் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகே உள்ள விட்டமாபட்டி பகுதிக்கு சென்றனா். அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்த மலரைக் கேட்ட இளம்பெண்ணுக்காக குளத்தில் இறங்கிய சச்சின் நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அப்பெண் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து சச்சினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அந்த இளைஞா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.