2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் தீத்தன்(79). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தம் வீட்டிலிருந்து நடந்து சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மயக்கம் ஏற்பட்டு முதியவா் சாலையில் மயங்கி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீத்தன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் கந்தசாமி விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.