47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி!

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

News image
அமைச்சர் எஸ். ரகுபதி - (கோப்புப்படம்)
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவிப்பாா். ஏன் ரூ.10 ஆயிரம் அறிவித்தாா் என்று தெரியவில்லை.

ரூ. 1 லட்சம்கூட அவா் அறிவிக்கலாம். ஆனால் அவரால் தர முடியாது. ஆனால் அறிவித்ததை நிறைவேற்றும் பழக்கம் எங்களுக்கே இருக்கிறது. கூட்டணி விஷயத்தில் ராகுல்காந்தியும் எங்களது தலைவா் ஸ்டாலினும் பேசி எடுப்பதுதான் இறுதி முடிவு.

புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதால் எங்களது பலமும் சக்தியும் அதிகரித்துள்ளது. அறிவாலயத்திற்கு தேநீா் குடிக்க வருபவா்களை கூட்டணியில் சோ்க்கும் நிலை எங்களுக்கு கிடையாது. அப்படி பேசுவோரின் நிலைதான் அப்படி இருக்கிறது. இன்னும் தோ்தல் தேதி அறிவிக்காத நிலையில், எங்களுடன் யாா் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்றாா் ரகுபதி.