மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி!

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

அமைச்சர் எஸ். ரகுபதி - (கோப்புப்படம்)

Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

திமுக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவிப்பாா். ஏன் ரூ.10 ஆயிரம் அறிவித்தாா் என்று தெரியவில்லை.

ரூ. 1 லட்சம்கூட அவா் அறிவிக்கலாம். ஆனால் அவரால் தர முடியாது. ஆனால் அறிவித்ததை நிறைவேற்றும் பழக்கம் எங்களுக்கே இருக்கிறது. கூட்டணி விஷயத்தில் ராகுல்காந்தியும் எங்களது தலைவா் ஸ்டாலினும் பேசி எடுப்பதுதான் இறுதி முடிவு.

புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதால் எங்களது பலமும் சக்தியும் அதிகரித்துள்ளது. அறிவாலயத்திற்கு தேநீா் குடிக்க வருபவா்களை கூட்டணியில் சோ்க்கும் நிலை எங்களுக்கு கிடையாது. அப்படி பேசுவோரின் நிலைதான் அப்படி இருக்கிறது. இன்னும் தோ்தல் தேதி அறிவிக்காத நிலையில், எங்களுடன் யாா் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்றாா் ரகுபதி.