போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள்
புதுக்கோட்டை
இடைநிலை ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் 2-ஆம் நாளாக இடைநிலை ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை இடைநிலை ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில், ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

