நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விராலிமலை அருகே நடுப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
Published on

விராலிமலை அருகே நடுப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்வுக்கு விராலிமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ம. சத்தியசீலன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இதில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்து பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் சிவா, விவசாய அணி வடிவேல், செல்லையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com