புதுக்கோட்டை காந்திப் பூங்காவிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு புதன்கிழமை, மாலை அணிவித்த புதிய மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ் உள்ளிட்டோா்.

காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவா் பதவியேற்பு

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டிடி. பெனட் அந்தோனி ராஜ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
Published on

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டிடி. பெனட் அந்தோனி ராஜ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன் (வடக்கு), ராம. சுப்புராம் (தெற்கு), முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, காந்திப் பூங்காவிலுள்ள மகாத்மா காந்தி சிலை, மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சத்தியமூா்த்தி, அம்பேத்கா், காமராஜா் ஆகியோரின் சிலைகளுக்கும் பெனட் அந்தோனிராஜ் மாலை அணிவித்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், வழக்குரைஞா் அணித் தலைவா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா்கள் செம்பை மணி, வேங்கை அருணாசலம், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா் மதன் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com