கோப்புப்படம்.
புதுக்கோட்டை
பையூா் விஏஓ மா்மச் சாவு
புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் பையூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் கருணாமூா்த்தி (28).
புதன்கிழமை மாலை மயங்கிய நிலையில் அவரை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு இருவா் தூக்கிக் கொண்டு வந்துள்ளனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருணாமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
கருணாமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலேயே தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
கருணாமூா்த்தியின் சாவில் மா்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்ததை அடுத்து, இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

