புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் கைது
பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான்.
பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான்.
பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தனது சகோதரிடன் விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த 13 வயதுச் சிறுவன் சாக்லெட் கொடுத்து தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

