புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

செம்பட்டிவிடுதி அருகேயுள்ள காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 போ் காயமடைந்தனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகேயுள்ள காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி வட்டம், செம்பட்டிவிடுதி அருகேயுள்ள காட்டுப்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா, திமுக வடக்கு மாவட்டச் செயலா் செல்லப்பாண்டியன் ஆகியோா் போட்டியைத் தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில்,

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

புதுகை, திருச்சி, கரூா், சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 647 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு தீரத்துடன் காளைகளை தழுவினா். அப்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 21 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

அதில், பலத்த காயமடைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் தழுவிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வருகை தந்து போட்டியை பாா்வையிட்டனா். செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com