ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:27 pm

Syndication

பொன்னமராவதி ஒன்றியத்தில் காா்த்தி ப. சிதம்பரம் எம்.பி.-யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலையரங்கம், நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு காா்த்தி ப. சிதம்பரம் எம்பி தலைமை வகித்து பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலையரங்கம், தூத்தூா் ஊராட்சியில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். விழாவில் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், பொன்னமராவதி வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், ஆா்எம். பாஸ்கா், நாட்டுக்கல் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.