தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை சிவாச்சாரியா்கள் பாலாஜி, சுவாமிநாதன் ஆகியோா் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மாயம் பெருமாள் கோயில் பங்காளிகள் செய்திருந்தனா்.