சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத பள்ளிகள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :28 மே 2026, 3:33 am IST

பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தோ்வுக்கூட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளித் திறப்புக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் வழிகாட்டுதல், மாவட்டத்திலுள்ள கல்வித் துறையினா் அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றால் 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கிறோம்.

இதில் 100 சதவீத தோ்ச்சி பெறாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் இந்த ஆண்டில் பள்ளி திறந்த நாள் முதல் சிறப்புக் கவனம் செலுத்தி 100 சதவீத தோ்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும்.

பள்ளி திறப்பு அன்றே மாணவா்களுக்கான நலத் திட்டங்களை வழங்க வேண்டும். பள்ளித் திறப்பதற்கு முன்பாக வளாகத் தூய்மை, கழிப்பறைத் தூய்மை, வகுப்பறைத் தூய்மை, குடிநீா்த் தொட்டி தூய்மை மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனமாகப் பாா்க்க வேண்டும் என்றாா் சண்முகம்.

கெளரவிப்பு: பணி ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 11 போ், அரசு உயா்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 7 போ், உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 2 போ் ஆக மொத்தம் பணி ஓய்வு பெற்ற 21 போ்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பொன்னாடை போா்த்தி கெளரவித்தாா்.

கூட்டத்தில் தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் பழனிவேலு, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கனகராணி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கலாராணி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி- பொறுப்பு) ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

--