ரயில் பயணிகளிடம் 12 செல்போன்களை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன் (18). இவருக்கு தந்தையும், தாயும் இல்லை.
இந்நிலையில், தில்லை நடராஜன் கும்பகோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொணடிருந்தாராம். அப்போது, கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபால் தலைமையிலான போலீஸார் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த தில்லை நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதில் சந்தேகமடைந்த போலீஸார், அவரை விசாரித்ததில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 12 செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், அந்த செல்போன்களை கும்பகோணம் ஹாஜியார் தெருவில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவர் திருடிய 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்

பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? - கி.வீரமணி கேள்வி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
