செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனையில் ஆட்சியர் என். சுப்பையன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனையில் ஆட்சியர் என். சுப்பையன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

அப்போது, மருத்துவமனைக்கு வர்ணம் பூசவும், மின் வயர்களை மாற்றியமைக்கவும், பழுதான மின்விளக்குகள், விசிறிகளை புதிதாக மாற்றவும் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வரும் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தரவும், பழைய கட்டடங்களை பழுதுநீக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

மருத்துவமனையில் சுகாதாரத்தை பேணும் பொருட்டு, அந்த வளாகத்தில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடவும், குடிநீர் வசதி செய்து தரவும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை புதிதாக வாங்க உடனடியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், காசநோய் மருத்துவமனையில் ரூ. 1.95 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வின் போது, மருத்துவமனை நிர்வாக அலுவலர் திருமால், மருத்துவர் ஜோதி, சத்திரம் வட்டாட்சியர் சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com