இலவச வீட்டு மனை பட்டா தேவைப்படுபவர்கள் நேரடியாக ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை வழங்க நில எடுப்பு செய்யும் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆதிதிராவிடர் இலவச வீட்டு மனைப்பட்டா கோரும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தி இலவச வீட்டு மனைத் தேவைப்படும் பயனாளிகள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.