கும்பகோணம் அருகே அங்காடியில் வழங்கப்பட்ட அரிசியில் எடை குறைவாக இருந்ததை அறிந்த ஆட்சியர் கடைக்காரரை எச்சரிக்கை செய்தார்.
கும்பகோணம் அறிஞர் அண்ணா நகரப் பேருந்து நிலையம், வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அங்கு உள்ள உணவகம் சுகாதாரமற்ற முறையில் இடத்தை ஆக்ரமிப்பு செய்து சுகாதாரமற்ற முறையில் உணவு வழக்கப்பட்டு வருவதைப் பார்வையிட்ட ஆட்சியர் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்ட பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும், ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறையைச் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலக்கொருக்கை கிராமக் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு செய்தபோது, இருவர் தலா 12 கிலோ வீதம் அரிசி வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த அரிசியின் அளவை, தராசில் வைத்து எடை சரியாக உள்ளதா என சரி பார்த்தார்.
ஒருவர் வாங்கிய அரிசியில் 12 கிலோவுக்கு பதிலாக 11.50 கிலோவும், மற்றொருவருக்கு 12 கிலோவுக்கு பதிலாக 10.94 கிலோவும் இருந்ததைக் கண்டறிந்து, கடைக்காரரை கடுமையாக எச்சரித்தார். குறைவாக வழங்கப்பட்ட அரிசி மீண்டும் அளவீடு செய்து இருவருக்கும் 12 கிலோ வழங்கப்பட்டது. மேலும் பல இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறைக் கோட்டச் செயற் பொறியாளர் சரவணசெல்வம், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாசலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு. அருணாசலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







