தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைப்பது என தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது, அதன்படி தஞ்சாவூர் மாநகரில் நகைக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், காய்கறி சந்தை, ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், டீ கடைகள் என அனைத்தும் இயங்காது, மேலும் தஞ்சாவூரிலும், மாரியம்மன்கோவில் பகுதியிலும் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகரத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாநில இணைச் செயலர் ரவி, அவைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


