பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்த பாலசௌந்தரபாண்டியன் (34), வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராஜ்கலா (29), 3 குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த பாலசௌந்தரபாண்டியன் சில நாள்களுக்கு முன்புதான் மீண்டும் வெளிநாடு சென்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குழந்தைகளை அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, பட்டுக்கோட்டை சென்ற ராஜ்கலா இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மம்தா: அஸ்ஸாம் முதல்வர்

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

