தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

காவலாளி  கொலைவழக்கில் இரு சிறுவர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜேந்திரன் (55).

Updated On :5 நவம்பர் 2018, 9:19 am IST

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜேந்திரன் (55). இவர் செங்கிப்பட்டியில் உள்ள கைவிடப்பட்ட தனியார் ஊசி தயாரிக்கும் ஆலையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு திருட வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, திருடுவதற்கு இடையூறாக இருந்த ராஜேந்திரனை கடந்த ஜூன் 24 ஆம் தேதி தாக்கியது. அவர் ஜூன் 30 ஆம் தேதி இறந்தார்.  இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
இந்நிலையில், திருமலைசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை இரவு செங்கிப்பட்டி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இரு சிறுவர்களைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், நண்பர்களான இவர்கள், தங்களுடைய மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து, செங்கிப்பட்டியில் உள்ள தனியார் ஊசி தயாரிக்கும் ஆலையில் திருடச் சென்றபோது,  இடையூறாக இருந்த ராஜேந்திரனை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இரு சிறுவர்களையும் கைது செய்ததுடன், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.