முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தீ விபத்தில் உணவகம் எரிந்து சேதம்

ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகியின் உணவகம் சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.

Updated On :5 நவம்பர் 2018, 9:18 am IST

ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகியின் உணவகம் சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு யானைக்கார தெருவை சேர்ந்தவர்  ராதாகிருஷ்ணன் (50). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு பகுதியின் நகரச் செயலராக இருந்து வரும் இவர் வீட்டினருகே கூரை கொட்டகையில் உணவகம் நடத்தி வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவு உணவகத்தில் மின் கசிவால் தீப்பற்றியது. தகவலின்பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது,  கடையில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் தீ மேலும் பரவியது. இதில் கடையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் உள்பட சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.