சரபோஜி கல்லூரியில் ஜூன் 3-இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் ஜூன் 3-ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்படவுள்ளது.
Updated on
1 min read


தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் ஜூன் 3-ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்செல்வி தெரிவித்திருப்பது: ஜூன் 3 காலை 9 மணிக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையும், அதைத் தொடர்ந்து பி.லிட். தமிழ் இலக்கியம், பி.ஏ. ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி பி.எஸ்சி. அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் 400 முதல் 250 வரையிலான மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி பி.எஸ்சி. அனைத்துப் பாடபிரிவுகளுக்கும் 250-க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கில மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி பி.ஏ. பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 400 முதல் 250 வரையிலான மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி பி.ஏ. பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 250-க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அவசியம் பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com