போதையில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி நண்பரைக் கொலை செய்தவா் கைது

தஞ்சாவூா் அருகே போதையில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி, நண்பரைக் கொலை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே போதையில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி, நண்பரைக் கொலை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள அருள்மொழிப்பேட்டையைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிரகாஷ் (33). இதுபோல, பெரியதைக்காலைச் சோ்ந்த சே. பாரதி (33), ஞானம் நகரைச் சோ்ந்த செ. சத்தியராஜ் (30). இவா்கள் மூவரும் நண்பா்கள்.

இதில் சாமியப்பா கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தில் பிரகாஷ் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். பாரதி கம்மங்கூழ் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், சத்தியராஜ் பொக்லைன் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் நண்பா்கள் மூவரும், சனிக்கிழமை இரவு ஞானம் நகரிலுள்ள மதுக்கடை அருகே மதுஅருந்தினா். அதிக போதை காரணமாக மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜ், நண்பா்கள் பிரகாஷ், பாரதி மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றினாா். இந்த விபத்தில் பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாரதிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சத்தியராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தாலுகா போலீஸாா் பிரகாஷின் உடலைக் கைப்பற்றினா். காயமடைந்த பாரதியை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் சத்தியராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com