தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 6,042 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையில் இருந்து விநாடிக்கு காவிரியில் 1,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,503 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2513 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,002 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.