தஞ்சாவூரில் 10 கிலோ கஞ்சா விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் சி. அறிவழகன் (29). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.